நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: கிரண்பேடி

நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: கிரண்பேடி
Updated on
1 min read

நியமன எம்எல்ஏ விவகாரம் தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் மத்திய அரசு புதுச்சேரி சட்டப்பேரவைக்கு 3 பேரை நியமன எம்.எல்.ஏக்களாக நியமித்துள்ளது. தலைமைச் செயலாளர் அரசிதழில் வெளியிட்டார். அதன் பின்னர் 3 பேரும் பேரவைத் தலைவரிடம் பதவிப் பிரமாணம் செய்து வைக்க தெரிவித்தனர். அவர் நேரம், தேதியை தெரிவிக்கவில்லை. அவர்கள் எழுத்துப்பூர்வ புகாரைத் தந்தனர். யூனியன் பிரதேச நிர்வாகி என்பதால் நான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தேன்.

ஆனால் நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரம் தொடர்பான அனைத்துக் கோப்புகளையும் பேரவைத் தலைவர் அலுவலகம் இன்று திருப்பி அனுப்பி உள்ளது. சரியான தகவல் தரவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது'' என்றார் கிரண்பேடி.

இந்நிலையில் குடியரசுத் தலைவரிடமும் உள்துறை அமைச்சரிடமும் புகார் தெரிவிக்க கிரண்பேடி திடீரென்று இன்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in