Published : 24 Jul 2017 09:19 AM
Last Updated : 24 Jul 2017 09:19 AM

கொடுங்கையூர் தீ: மேலும் ஒருவர் பலி

சென்னை கொடுங்கையூரில் இருந்த உணவகத்தில் கடந்த 15-ம் தேதி இரவு நிகழ்ந்த தீ விபத்தில் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் தீயணைப்பு வீரர்கள், வேடிக்கை பார்த்த மக்கள் உட்பட 48 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். தீயணைப்பு வீரர் ஏகராஜ் உட்பட 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பார்த்திபன் என்பவர் நேற்று காலை உயிரிழந்தார். இதன்மூலம் கொடுங்கையூர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மீதமுள்ள 11 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x