Published : 22 Jul 2017 09:25 AM
Last Updated : 22 Jul 2017 09:25 AM
பதாகைகளை அகற்ற வலியுறுத்தி, திருப்பூரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் டிராபிக் ராம சாமி, திடீரென மயக்கமடைந்தார்.
திருப்பூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று (ஜூலை 22-ம் தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி, மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அதிமுக அம்மா அணி சார்பில், பல்வேறு பகுதிகளில் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, சாலையோரம் வரவேற்புப் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை அங்கு வந்த டிராபிக் ராமசாமி, பதாகைகளை அகற்ற வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற வட்டாட்சியர் சுப்பிரமணியம் மற்றும் போலீஸார், டிராபிக் ராமசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப் பினும், பதாகைகளை அகற்றும் வரை அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, பதாகைகள் அகற்றப்பட்டன. திடீரென மயக்க மடைந்த டிராபிக் ராமசாமியை, திருப்பூர் அரசு தலைமை மருத்துவ மனையில் சேர்த்தனர். முதலுதவிக் குப் பிறகு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT