Published : 14 Jul 2017 10:02 AM
Last Updated : 14 Jul 2017 10:02 AM
ஐஎஸ் ஆதரவாளருக்கு போலி பாஸ்போர்ட் வாங்கி கொடுத்த டிராவல்ஸ் நிறுவனத்தில் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டி அனுப் பியதாக ராஜஸ்தானை சேர்ந்த ஜமீல் முகமது என்பவரை ராஜஸ் தான் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த பிப்ர வரி மாதம் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த இக்பால், சென்னை முத்தியால் பேட்டையில் வசித்த ஹாரூண் ஆகி யோரை ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீ ஸார் கைது செய்தனர். இக்பால், ஹாரூண் இருவரையும் ராஜஸ் தான் அழைத்துச் சென்று விசா ரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஐஎஸ் இயக் கத்தில் சேருவதற்காக டெல்லியில் இருந்து துருக்கி செல்ல முயன்ற ஷாஜகான் என்பவரை டெல்லி தேசிய புலனாய்வு முகமை அதி காரிகள் கைது செய்தனர். அவர் வைத்திருந்த பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது அது போலி யானது என்பது தெரியவந்தது. சென்னை மண்ணடியில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முஸ்தபா முகமது என்பவர் இந்த போலி பாஸ்போர்ட்டை தயார் செய்து கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது.
முஸ்தபாவின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாட்டம் அதிராம் பட்டினம். அங்கு வீட்டில் இருந்த முஸ்தபாவை டெல்லி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து நேற்று காலையில் சென்னை அழைத்து வந்தனர். சென்னை மண்ணடியில் உள்ள அவரது டிராவல்ஸ் நிறுவனத்துக்கு அழைத்து வந்து, அங்கு சோதனை நடத்தி, சில ஆவணங்களை கைப்பற்றினர். இன்று(14-ம் தேதி) முஸ்தபாவை டெல்லி அழைத்துச் செல்ல உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT