Published : 20 Jul 2017 12:20 PM
Last Updated : 20 Jul 2017 12:20 PM

சென்று வென்று வந்தால் மகிழ்ச்சியே: நீட் தேர்வு விலக்குக்காக டெல்லி சென்ற அமைச்சர்கள் குறித்து ஸ்டாலின் கருத்து

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழக அமைச்சர்கள் டெல்லி சென்றுள்ளனர். அவர்கள் சென்று வென்று வந்தால் மகிழ்ச்சியே என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்தபிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின் பேசியதாவது:

''நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழக அமைச்சர்கள் டெல்லி சென்றுள்ளனர். அவர்கள் சென்று வென்று வந்தால் மகிழ்ச்சியே. ஆனால் மத்திய அரசுக்கு மண்டியிட்டு அடிபணிந்து இருக்கும் அதிமுக அரசு அதைச் செய்யுமா என்று தெரியவில்லை.

திமுகவின் முரசொலி பவள விழாவில் கலந்துகொள்பவர்கள் குறித்த விவரம் இன்னும் முடிவாகவில்லை. அவை இறுதி செய்யப்பட்டவுடன் அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படும்.

நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் மனிதச் சங்கிலி போராட்டத்தில் இளைஞர்கள் மற்றும் அனைத்துக் கட்சியினரும் கலந்துகொள்ள வேண்டும்''

இவ்வாறு தெரிவித்தார் ஸ்டாலின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x