Published : 11 Nov 2014 11:42 AM
Last Updated : 11 Nov 2014 11:42 AM

தெலங்கானாவில் ரூ.17 ஆயிரம் கோடி விவசாய கடன் ரத்து

நாட்டிலேயே முதன் முறையாக ரூ.17 ஆயிரம் கோடி விவசாயக் கடனை ரத்து செய்வதாக தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் ரத்து செய்யப் படும் என ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநில முதல்வர்களும் தேர்தல் வாக்குறுதி அளித்திருந் தனர். இதன்படி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ. 5 ஆயிரம் கோடி விவசாயக் கடன்களை ரத்து செய்வதாக அறிவித்தார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் பேசும்போது, “ரூ. 17 ஆயிரம் கோடி விவசாயக் கடன் ரத்து செய்யப்படுகிறது. ஒரு மாநில அரசு இவ்வளவு அதிகமான கடன் தொகையை ரத்து செய்வது இதுவே முதன்முறை” என அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x