Published : 27 Jul 2017 09:34 AM
Last Updated : 27 Jul 2017 09:34 AM
வருவாய் துறையில் நேரடியாக உதவியாளர் பணியில் சேர்ந்தவர்களுக்கு 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருந்தால் மட்டுமே துணை தாசில்தார் பதவி உயர்வு என்ற தமிழக அரசின் விதிகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வேலூர் மாவட்ட வருவாய் கோட்டத்தைச் சேர்ந்த திருமலை என்பவர் உள்ளிட்ட 23 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுக்களில், ‘வரு வாய் துறையில் நேரடியாக உதவியாளர்களாக நியமிக்கப் பட்டவர்கள் 5 ஆண்டு பணிபுரிந் தால் மட்டுமே துணை தாசில் தார்களாக பதவி உயர்வு பெற முடியும் என தமிழ்நாடு வருவாய் சார்பு நிலைப் பணிகள் விதிகளில் உள்ளது. ஆனால் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர், சுருக்கெழுத்தாளர் போன்றவர்கள் 4 ஆண்டுகள் பணிபுரிந்தாலே உதவியாளர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றனர். நேரடியாக உதவியாளர் பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் என்பது சட்டவிரோதமானது. எனவே, அந்த பதவி உயர்வுக்கு தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நடந்தது. மனுதாரர் கள் சார்பில் வழக்கறிஞர் பிரபு தாஸ் ஆஜராகி, ‘‘வருவாய் துறை யில் நேரடியாக உதவியாளர் களாக நியமிக்கப்பட்டவர்களுக் கும் 4 ஆண்டுகள் பணிஅனுபவம் இருந்தாலே துணை தாசில்தார் பதவி உயர்வு அளிக்க வேண்டும்’’ என வாதிட்டார்.
இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், ‘‘துணை தாசில்தார் பதவி உயர்வு, பதவி மூப்புக்கான பட்டியல் தயாரிப்பது என அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்தாலும் அது இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது’’ எனக்கூறி விசாரணையை தள்ளி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT