Published : 04 Nov 2014 09:36 AM
Last Updated : 04 Nov 2014 09:36 AM
எழுத்தாளர் ஜெயமோகனின் ‘வெண்முரசு’ தொடரின் நூல்கள் வெளியீட்டு விழா வரும் 9-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிவரும் ‘வெண்முரசு’ மகாபாரத தொடரின் நூல்களான முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் ஆகிய நூல்களின் அறிமுகம் மற்றும் வெளியீட்டு விழா சென்னை எழும்பூரில் உள்ள மியூசியம் தியேட்டர் அரங்கில் வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது.
இந்த விழாவில் எழுத்தாளர்கள் அசோகமித்திரன், பி.ஏ.கிருஷ்ணன், பிரபஞ்சன், நாஞ்சில்நாடன், பேராசிரியர் னிவாசன், ஓவியர் ஷண்முக வேல், நடிகர் கமல்ஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் என விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT