Published : 11 Jul 2017 06:28 PM
Last Updated : 11 Jul 2017 06:28 PM

10 ரூபாய்க்கு 225 மில்லி லிட்டர் ஆவின் பால் பாக்கெட் அறிமுகம்: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அறிவிப்பு

ரூ.10-க்கு 225 மில்லி லிட்டர் ஆவின் பால் பாக்கெட் அறிமுகப்படுத்தப்படும் என்று பேரவையில் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அறிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 23 புதிய அறிவிப்புகளை அறிவித்தார்.

1. ஏழை எளிய மக்களும் சத்துள்ள பால் அருந்திட ஏதுவாக, ரூ.10/- விலையில் 225 மில்லி லிட்டர் ஆவின் பால் பாக்கெட் அறிமுகப்படுத்தப்படும்.

2. ரூ. 3 கோடியே 97 லட்சம் செலவில், இணையம் மற்றும் மாவட்ட ஒன்றியங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 5 ஆயிரத்து 439 பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு அரை லிட்டர் பால் விலையின்றி வழங்கப்படும்.

3. ரூ.1 கோடியே 15 லட்சம் செலவில், இணையம் மற்றும் மாவட்ட ஒன்றியங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வழங்கப்படுவது போலவே, ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கும் மருத்துவ வசதி மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

4. ரூ.5 கோடியே 70 லட்சம் செலவில், சென்னை மாநகரில் நுகர்வோர் நலனுக்காக, 115 தானியங்கி பால் வழங்கும் நிலையங்கள், பாலகங்களாக மாற்றி அமைக்கப்படும்.

5. ரூ.1 கோடியே 40 லட்சம் செலவில், தொடக்க பால் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட ஒன்றியங்கள் மற்றும் இணையத்தில், பணிபுரியும் 28 ஆயிரம் பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் சீருடைச் செலவு மற்றும் தையற்கூலிஆகியவை கூடுதலாக ரூபாய் 500 உயர்த்தி வழங்கப்படும்.

6. ரூ.37 லட்சத்து 50 ஆயிரம் செலவில், 50 பால் கூட்டுறவு சங்கங்களுக்கு மின்னணு பால் பரிசோதனைக் கருவிகள் வழங்கப்படும்.

7. ரூ.10 கோடிமதிப்பீட்டில், சேலத்தில் நாளொன்றுக்கு 6 ஆயிரம் லிட்டர் திறன் கொண்ட புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலை நிறுவப்படும்.

8. ரூ.10 கோடிமதிப்பீட்டில், விருதுநகர் ஒன்றியத்தில்நாளொன்றுக்கு 50 மெட்ரிக் டன் திறன் கொண்டகால்நடைத் தீவனதொழிற்சாலைநிறுவப்படும்.

9. ரூ.50 லட்சம் மதிப்பீட்டில், தருமபுரி ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 12 மெட்ரிக் டன் திறன் கொண்ட புதிய தாது உப்பு கலவை தொழிற்சாலை நிறுவப்படும்.

10. ரூ.3 கோடி முதலீட்டில், திண்டுக்கல், விருதுநகர், தருமபுரி மற்றும் சிவகங்கை மாவட்ட ஒன்றியங்களில் தலா 3 புதிய பாலகங்கள் வீதம் 12 பாலகங்கள் அமைக்கப்படும்.

11. ரூ.20 லட்சம் செலவில், 120 புதிய சங்கங்களுக்கு 480 பால்கேன்கள் வழங்கப்படும்.

12. ரூ.1 கோடியே 90 லட்சம் செலவில், சேலம் பால் பண்ணையில் உட்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படும்.

13. ரூ.1 கோடியே 77 லட்சம் செலவில், திருநெல்வேலி பால் பண்ணைக்கு புதிய உபகரணங்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.

14. ரூ.41 லட்சம் செலவில், விழுப்புரம்-கடலூர் மாவட்ட ஒன்றியம், சேத்தியாதோப்பு பால் குளிரூட்டும் நிலைய உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

15. ரூ.63 லட்சம் செலவில், திருச்சி பால்பண்ணைக்கு புதிய உபகரணம் மற்றும் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

16. ரூ.30 லட்சம் செலவில், தருமபுரி பால் பண்ணைக்கு தேவையான புதிய உபகரணங்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.

17. ரூ.1 கோடியே 16 லட்சம் செலவில், தஞ்சாவூர் ஒன்றியத்தில் புதிய கால்நடை தீவனசேமிப்பு அறை மற்றும் பட்டுக்கோட்டை பால்குளிரூட்டு நிலையகழிவுநீர் சுத்திகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

18. ரூ.94 லட்சம் மதிப்பீட்டில், திருவண்ணாமலை பால் குளிரூட்டும் நிலையம் மற்றும் வேலூர் பால்பண்ணைக்குத் தேவையான புதிய உபகரணங்கள் நிறுவி, உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

19. ரூ.5 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில், திருவண்ணாமலை பால் பண்ணை மற்றும் பால் பவுடர் தொழிற்சாலைக்குத் தேவையான புதிய உபகரணங்கள் நிறுவப்படும்.

20. ரூ.3 கோடியே 16 லட்சம் செலவில், அம்பத்தூர் பால் பண்ணைக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

21. ரூ.2 கோடியே 10 லட்சம் செலவில், மாதவரம் பால் பண்ணைக்குத் தேவையான புதிய கொதிகலன்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும்.

22. ரூ.6 கோடியே 76 லட்சம் செலவில், சோழிங்கநல்லலூர் பால்பண்ணையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையதிறன் அதிகரிப்பு, 5 புதிய அதிவிரைவுபேக்கிங் இயந்திரங்கள் மற்றும் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு பால் குளிர்விப்பு அறை ஆகிய பணிகள்மேற்கொள்ளப்படும்.

23. ரூ.60 லட்சம் செலவில், திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூர் ஒன்றியங்களில் 5,000 லிட்டர் திறன் கொண்ட இரண்டு புதிய தொகுப்பு பால் குளிர்விப்பான் மையங்கள் அமைக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவித்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x