+ 2 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காதது ஏன்? - அமைச்சர் விளக்கம்

+ 2 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காதது ஏன்? - அமைச்சர் விளக்கம்
Updated on
1 min read

நீதிமன்ற தடை இருப்பதால் கடந்த ஆண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினர் பி.கே.சேகர்பாபு, ‘‘தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கு கடந்த ஆண்டு மடிக்கணினி வழங்கப்படவில்லை. இதனால், ஏழை மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக அவர்களுக்கு மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

அவருக்குப் பதிலளித்த அமைச் சர் செங்கோட்டையன், ‘‘பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடை நீக்கப்பட்ட பிறகு மடிக்கணினி வழங்கப்படும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in