Published : 08 Jul 2017 08:25 AM
Last Updated : 08 Jul 2017 08:25 AM

பரவலாக மழை பெய்ததால் வெப்பநிலை குறைந்தது: ஸ்ரீபெரும்புதூர், எண்ணூரில் 7 செ.மீ. மழை

தமிழகத்தில் பல்வேறு பகுதி களில் பரவலாக மழை பெய்த தால், பல நகரங்களில் வெப்பநிலை குறைந்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு நல்ல மழை பெய்துள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது. நேற்று காலை 8.30 மணிக்கு எடுக்கப்பட்ட மழை அளவின்படி பெரும்புதூர், எண்ணூர் துறைமுகம் ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ., சென்னை விமான நிலையம், சிவகங்கையில் தலா 5 செ.மீ., மாமல்லபுரத்தில் 4 செ.மீ., ஜெயங்கொண்டம், செம்பரம்பாக்கம், கும்பகோணம், சின்னகல்லாரில் தலா 3 செ.மீ., திருவாரூர், நாகப்பட்டினம், லால்குடி, தளி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆர்.கே.பேட்டை, உத்திரமேரூர், திருவையாறு, சோளிங்கர், பொன்னேரி, கொட வாசல் ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு பரவலாக மழை பெய்ததால், பல்வேறு நகரங் களில் வெப்பநிலை வெகுவாகக் குறைந்துள்ளது. நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெயில் அளவின்படி, அதிகபட்சமாக மதுரையில் 102.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி இருந்தது. மற்ற நகரங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் குறைவாகவே இருந்தது. சென்னையில் 94.1 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியிருந்தது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x