Published : 14 Jul 2017 10:09 AM
Last Updated : 14 Jul 2017 10:09 AM
திருவாரூர், தஞ்சாவூர், வேதாரண்யம் உள்ளிட்ட 4 இடங்களில் உள்ள மடங்களின் மடாதிபதியாக தன்னை அறிவிக்கக்கோரி நித்யானந்தா தொடர்ந்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
திருவாரூர் சோமநாதசுவாமி கோவில் மடம், வேதாரண்யம் பொ.க.சாதுக்கள் மடம், பஞ்சனாதி குளம் அருணாச்சல ஞான தேசிகர் சுவாமிகள் மடம் மற்றும் தஞ்சாவூர் சங்கர சுவாமிகள் மடம் ஆகிய நான்கு மடங்களின் மடாதிபதியாக தன்னை அறிவிக்கக்கோரி நித்யானந்தா நாகப்பட்டினம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சேலத்தைச் சேர்ந்த சாரதா நிகேதன் சமிதி அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கொள் காட்டி, நித்யானந்தா தாக்கல் செய்துள்ள வழக்கை ரத்து செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT