

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த, ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையைச் சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
இந்நிலையில், கடந்த 16-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையில் இருந்து 50-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் நாகூர் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகைக் கைப்பற்றி அதில் இருந்த நாகூர், செட்டி, பார்த்தி, சக்தி ஆகிய 4 மீனவர்களை சிறைபிடித்தனர்.
4 மீனவர்களும், காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு பிறகு யாழ்ப்பாணம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர், ஊர்க்காவல் நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப் பட்டனர்.
சிங்கள மீனவர்கள் விதிமீறல்
யாழ்ப்பாணத்தில், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் நேற்று கூறியதாவது: எல்லை தாண்டிவந்து இலங்கை கடற்பரப்புக்குள் தடை செய்யப் பட்ட வலைகளைக் கொண்டு மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை கைது செய்து படகுகளைக் கைப்பற்றும் இலங் கையின் கடற்படையினர், தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள மீனவர்கள் வட மாகாண கடற்பகுதிகளில் தடை செய்யப் பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதை கண்டு கொள்வ தில்லை.
சிறைத் தண்டனை மற்றும் அபராதம் மூலமாக, தமிழக மீனவர்களின் மீன்பிடிப்பதை குறைத்திருக்கும் இலங்கை அரசு, தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள மீனவர்களின் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளையும் தடை செய்ய வேண்டும் என்றார்.