Published : 06 Jul 2017 11:34 AM
Last Updated : 06 Jul 2017 11:34 AM

எடப்பாடி அணிக்கு போட்டியாக மதுரையில் டிடிவி.தினகரன் பொதுக்கூட்டம்: பிரம்மாண்ட கூட்டத்தை திரட்ட ஆதரவாளர்கள் திட்டம்

மதுரையில் எடப்பாடி அணிக்குப் போட்டியாக டிடிவி.தினகரனை அழைத்து பிரம்மாண்டாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொது க்கூட்டத்தை நடத்த அவரது ஆதரவாளர்கள் முடிவு செய் துள்ளனர். இதற்காக அவர்கள் சென்னை சென்று டிடிவி.தினகரனை சந்திக்க திட்டமிட் டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக அரசு சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கடந்த மாதம் 30-ம் தேதி மதுரை ‘ரிங்’ ரோடு அருகே நடந்தது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பங்கேற்க கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும், துணைப்பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனுக்கும் அழைப்பு விடுக்கவில்லை.

ஆனால், அரசு விழா என்பதால் அவர்களை அழைக்கவில்லை என கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சமாளித்தனர். மேலும், இந்த விழாவில் உள்ளூர் தினகரன் ஆதரவாளர்களான கட்சியின் முன்னாள் நிர்வாகிகளும் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டனர். அதனால், அவர்கள் இந்த விழாவை முன்னின்று நடத்திய முக்கிய நிர்வாகிகள் மீது டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதுரை டவுன்ஹால் ரோட்டில் ஒரு தனியார் விடுதியில் எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள், டிடிவி.தினகரன் அணியினர், மாநகர் மாவட்ட செயலாளரும் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை அழைக்காமலே தனியாக கூட்டத்தை நடத்தினர். இந்த கூட்டத்தில் முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.ஆர்.ராஜாங்கம், எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.டி.ஜெயபால் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மதுரையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தை பிரம்மாண்டாக நடத்துவது என்றும், அந்த கூட்டத்திற்கு கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனை தலைமை தாங்க அழைப்பது என்றும் முடிவு செய்தனர்.

சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அணியினர் நடத்திய நூற்றாண்டு விழாவுக்கு போட்டியாக டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்ய உள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

டிடிவி.தினகரன் ஆதரவாளர் களின் இந்த போட்டிக்கூட்ட நிகழ்ச்சி ஏற்பாடு, அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்எல்ஏ மற்றும் அவரது ஆதர வாளர்களை உள்ளடக்கிய எடப் பாடி அணியினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.ஆர்.ராஜாங்கத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி மதுரையில் டிடிவி.தினகரனை அழைத்து ஒரு பொதுக்கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். அதற்கு டிடிவி.தினகரனின் அனுமதியை பெற அவரை சந்திக்க சென்னை செல்ல உள்ளோம். அவர் அனுமதி கொடுத்தால் கூட்டம் நடத்தப்படும். டிடிவி.தினகரன் கட்சியை வழிநடத்த வேண்டும். ஆட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவனித்துக் கொள்ளட்டும்.

எங்களை பொறுத்தவரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒப்படைத்து சென்ற ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற வேண்டும். எம்ஜிஆர் உருவாக்கிய இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமைச்சரை ஏன் அழைக்கவில்லை?

மாநகர் மாவட்டச் செயலாளர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை அழைக்காமல் தனியாக கூட்டம் நடத்தியது குறித்து வி.ஆர்.ராஜாங்கத்திடம் கேட்டபோது, அவர், ‘‘நாங்கள் கூட்டமாக சேர்ந்து கலந்துரையாடினோம். தனியாக ஊழியர் கூட்டம் போடவில்லை. ஊழியர் கூட்டம் போட்டிருந்தால் மாநகர் மாவட்டச் செயலாளரை அழைத்து இருக்கலாம். கூட்டம் நடத்த முடிவாகி ஊழியர் கூட்டம் போடும்போது அவரை அழைப்போம்.

அதிமுகவை பொறுத்தவரையில் தனி ஒரு தொண்டன் கூட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யலாம். அதற்கு மாவட்டச் செயலாளர் அனுமதி தேவையில்லை. டிடிவி.தினகரன் அனுமதியளித்தால் நாங்கள் நடத்தப்போகும் இந்த கூட்டத்திற்கு கண்டிப்பாக அமைச்சர்களையும், எம்எல்ஏக்களையும் அழைப்போம். எங்களுக்குள் மோதல் எதுவும் இல்லை. கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றவே போராடுகிறோம், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x