Published : 22 Jul 2017 09:38 AM
Last Updated : 22 Jul 2017 09:38 AM
தொகுதி பிரச்சினைகளைக் கண்டு கொள்ளாததால்தான், அவைக்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தேன் என முன்னாள் அமைச்ச ரும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி எம்எல்ஏ.வுமான தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
தோப்பு வெங்கடாசலம் தனது சட்டப்பேரவை அவைக்குழு உறுப் பினர் பதவியை நேற்று முன்தினம் திடீரென ராஜினாமா செய்தார்.
அவரது இந்த நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, ‘எனது பெருந்துறை தொகு தியை முதல்வர் கண்டுகொண்ட தாக தெரியவில்லை. மாவட்ட அமைச்சர்களும் கண்டுகொள்ளா மல் தொடர்ந்து புறக்கணித்து கொண்டே இருக்கிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அவைக்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து உள்ளேன்’ என்று தெரி வித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT