Published : 23 Jul 2017 11:48 AM
Last Updated : 23 Jul 2017 11:48 AM

இன்றைய இளைஞர் முன்னேற்றத்துக்கு எம்ஜிஆர் பாடல்கள் உதவும்: ப.தனபால்

இன்றைய கால இளைஞர்களுக் கும் எம்ஜிஆரின் பாடல்கள் பயன்படும். அவர்களது முன்னேற்றத்துக்கு உதவும் என்று சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால் தெரிவித்தார்.

முதல் நிகழ்வாக சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால் மற்றும் மக்களவை துணைத்தலை வர் மு.தம்பித்துரை, திடலில் அமைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவப்படத்துக்கு மலர் தூவி விழாவைத் தொடங்கி வைத்தனர்.

அதன்பின் திடலில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்தனர். இதில் வனத் துறை அமைச்சர் சீனிவாசன், பள்ளிக்கல்வி மற்றும் விளையாட் டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கூட் டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச் சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்ராஜூ, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி என். தளவாய்சுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதையடுத்து பள்ளி மாணவர் களுக்கான திறன்மேம்பாட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதில், எம்ஜிஆர் திரையுலக வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கை குறித்த காட்சிப்பதிவு கள் பிரம்மாண்ட எல்இடி திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு ராஜ்யசபா முன்னாள் எம்.பி. ரபிபெர்னாட் விளக்கினார். அதில் அகதியாக இந்தியாவுக்கு வந்து அவர் பட்ட அவதிகள் தொடங்கி, திரையுலகில் மற்றவர்களுக்கு பாடமாக இருந்த காட்சிகள் தொகுத்து ஒளிபரப்பு செய்யப்பட்டன.

அதன்பின், திருப்பூர் மாவட்டம் முழுவதும் திரண்டு வந்திருந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்ற திறன்மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை டாக்டர் கண்ணன் கிரிஷ் எடுத்தார். கோவை விமானநிலையத்தில் இருந்து திருப்பூர் வந்த முதல்வர் பழனிசாமிக்கு அவிநாசி மற்றும் அனுப்பர்பாளையத்தில் மாநகர் மாவட்ட அதிமுக அம்மா அணி மற்றும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாலையில் நடைபெற்ற விழாவில் தலைமை வகித்து ப.தனபால் பேசியதாவது:

‘ஆளுக்கொரு வீடு கட்டுவோம்’ என அன்றைக்கு எம்ஜிஆர் திரைப்படத்தில் பாடல் பாடினார். குடிசைகள் இல்லாத மாநிலமாக தமிழகம் முழுவதும் இந்த அரசால் வீடுகள் கட்டித் தரப்படுகின்றன. மிகவும் சிறப்பான திட்டம் இது. இன்றைய கால இளைஞர்களுக்கும் எம்ஜிஆரின் பாடல்கள் பயன்படும். அவர்களது முன்னேற்றத்துக்கு உதவும். எம்ஜிஆர், ஜெயலலிதா காப் பாற்றிய ஆட்சி எனும் தீபத்தை கே.பழனிச்சாமி தொடர்ந்து காப் பாற்றுகிறார். அவருக்கு உறு துணையாக இருக்க அனைவரும் உறுதி ஏற்போம் என்றார்.

முன்னதாக, எம்ஜிஆர் நடித்த படங்களிலிருந்து பாடல்களை ஆர்கெஸ்ட்ரா குழுவினர் பாடி, குழுமியிருந்த தொண்டர்களை உற்சாகப்படுத்தினர்.

இறுதியாக முதல்வருக்கு வீரவாள் மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x