Published : 06 Jul 2017 07:37 PM
Last Updated : 06 Jul 2017 07:37 PM

மருத்துவ மாணவர் சேர்க்கை உள்ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை சட்டரீதியாக சந்திப்போம்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

மருத்துவ மாணவர் சேர்க்கை ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை சட்டரீதியாக சந்தித்து வெற்றி பெறுவோம் என சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள புதிய தோரண நுழைவாயிலை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று திறந்துவைத்தார்.

அதன்பின், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''மருத்துவ மாணவர் சேர்க்கையில் வழங்கப்பட்டுள்ள உள்ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை சட்டரீதியாக சந்தித்து வெற்றி வெறுவோம். மாநில அரசு இதற்கு தேவையான அனைத்து சட்ட முயற்சிகளையும் எடுக்கும். நீதிமன்றத்தில் நியாயமான வாதங்களை முன்வைப்போம். நீதிமன்றமும் எங்கள் தரப்பு கருத்துகளை உணர்ந்துகொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது'' என்றார்.

இந்த விழாவில் எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, நார்த்தாமலை பா.ஆறுமுகம், மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின்ஜோ, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நாராயணபாபு உட்பட பலர் பங்கேற்றனர்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x