புழல் சிறையில் 41 கைதிகள் 8-ம் வகுப்பு தேர்ச்சி

புழல் சிறையில் 41 கைதிகள் 8-ம் வகுப்பு தேர்ச்சி
Updated on
1 min read

புழல் மத்திய சிறையில் 2016-2017-ம் கல்வி ஆண்டில் 41 பேர் 8-ம் வகுப்பு தேர்வு எழுதினர். இவர்களில் 6 பேர் பெண் கைதிகள். தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளிவந்தன. இதில் தேர்வு எழுதிய 41 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண் கைதி அஞ்சலை 331 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தையும், மணிகண்டன் 330 மதிப்பெண் எடுத்து 2-வது இடத்தையும் பிடித்தனர். தேர்ச்சி பெற்றவர்களையும், சிறைப் பள்ளி ஆசிரியர் ராசேந்திரனை யும் சிறைத்துறை தலைவர் சி.சைலேந்திரபாபு பாராட்டினார்.

தமிழகத்தில் உள்ள 14 சிறை களில் 6,030 பேர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in