Published : 13 Jul 2017 09:00 AM
Last Updated : 13 Jul 2017 09:00 AM
தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொதுப்பணித் துறையில் பணிக்காலத்தில் காலமான 75 பேரின் வாரிசுதாரர்கள் மற்றும் மருத்துவச் சான்றின் பேரில் இயலாமையால் ஓய்வுபெற்ற 2 பணியாளர்களின் வாரிசுதாரர் கள் என மொத்தம் 77 வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படை யில் பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 7 நபர்களுக்கு தலைமை செயலகத் தில் முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார்.
காலிப் பணியிடங்களில் 77 வாரிசுதாரர்களும் முதுநிலை வரிசைப்படியும், கல்வித் தகுதி அடிப்படையிலும் உதவி வரை வாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், பதிவுரு எழுத்தர், ஆய்வகப் பணியாளர், ஆய்வக சிற்றெழுத்தர், தொலைபேசி எழுத்தர், உதவியாளர், பாசன உதவியாளர், காவலர், தோட்டக்காரர் துப்புரவாளர் ஆகிய பணியிடங்களில் கருணை அடிப்படையில் நிரப்பப்பட உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT