Published : 05 Jul 2017 09:35 AM
Last Updated : 05 Jul 2017 09:35 AM
திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபாலுக்கு நேற்று அதிகாலை திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் குழுவினர் அவரை பரிசோதனை செய்து, சிகிச்சை அளிக்கத் தொடங்கினர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் முதல்வர் கே.பழனிசாமி, அமைச்சர் கே.பி.அன்பழகன், சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் எம்எல்ஏக்கள் மருத்துவமனைக்கு சென்று தனபாலின் உடல்நலம் குறித்தும் மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றியும் டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.
இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தலைச் சுற்றல் காரணமாக சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால், செவ்வாய்க்கிழமை அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். தற்போது அவர் நலமாக உள்ளார். டாக்டர்கள் குழுவினர் அவரை கண்காணித்து வருகின்றனர்’ என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சட்டப் பேரவை நிகழ்வுகளில் பேரவைத் தலைவர் தனபால் இன்று (புதன்கிழமை) பங்கேற்பார் என்று பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் சட்டப் பேரவையில் நேற்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT