Published : 08 Jul 2017 10:16 AM
Last Updated : 08 Jul 2017 10:16 AM
சேலம் அருகே தம்பதியரை கட்டிப்போட்டு ரொக்கம் ரூ. 7 லட்சம், 40 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலை ஆறு தனிப்படை போலீஸார் தேடிவருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மணிவிழுந்தான் சக்தி நகரைச் சேர்ந்த மரவள்ளி கிழங்கு தரகர் பழனிவேல்(59). இவ ரது மனைவி பத்மாவதி(51). இவர் களது மகன் ஷ்யாம்சுந்தர்(21) சென்னையில் மருத்துவக் கல் லூரியில் படித்து வருகிறார்.
சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பழனிவேலின் வீடு உள்ளது. நேற்று அதிகாலை பழனிவேலும், அவரது மனைவி பத்மாவதியும் வீட்டின் ஜன்னல் அருகே வந்து கூச்சலிட்டுள்ளனர். அருகில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு வீட்டுக்குள் வந்து, கட்டப் பட்ட நிலையில் இருந்த தம்ப தியை விடுவித்தனர். மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்து கொள்ளை யடித்துச் சென்றதாக பழனிவேல், தலைவாசல் போலீஸ் ஸ்டேஷ னுக்கு தகவல் அளித்தார். ஆத்தூர் டிஎஸ்பி பொன்கார்த்திக் தலைமையிலான போலீஸார் பழனிவேல், பத்மாவதியிடம் விசாரணை செய்தனர்.
நேற்று முன்தினம் இரவு தம்பதி, சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றனர். நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் திடீரென வீட்டுக்குள் நான்கு பேர் கொண்ட கும்பல் புகுந்துள்ளது. இரண்டு பேர் வீட்டுக்கு வெளியே நோட்ட மிட்டபடி நின்றுள்ளனர். பழனி வேலுவையும், பத்மாவதியையும் தாக்கிய நான்கு கொள்ளையர் களும், அவர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டி பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகை, ரூ.7 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டனர். பின்னர் தம்பதியரை கட்டிப்போட்டு மிரட்டி விட்டு, ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரையும் வீட்டில் இருந்து எடுத்துக்கொண்டு, ஆறு பேரும் தப்பிச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ஆறு தனிப்படை போலீ ஸார் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளையர்கள் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து, ஏணி மூலம் மொட்டை மாடிக்குச் சென்று, அங்குள்ள பூட்டை உடைத்து, வீட்டுக்குள் புகுந்துள்ளனர். தமிழில் பேசிய கொள்ளையர்கள், சென்னை செல்லும் வரை போலீஸாருக்கு தகவல் தெரி வித்தால், கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT