Published : 30 Jul 2017 06:50 PM
Last Updated : 30 Jul 2017 06:50 PM
ஓ.பன்னீர்செல்வம் வேறு யாரும் இல்லை. அவர் எங்களின் பங்காளிதான் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''முதல்வர் பழனிசாமி நல்ல முறையில் ஆட்சி நடத்தி வருகிறார். அவர் தன்னிச்சையாக செயல்படவில்லை. மற்ற அமைச்சர்களுடன் கலந்து ஆலோசனை செய்துதான் ஆட்சி நடத்துகிறார்.
ஓ.பன்னீர்செல்வம் வேறு யாரும் இல்லை. அவர் எங்களின் பங்காளிதான். அந்த அணியில் இருந்து ஒவ்வொருவராக எங்களுடன் இணைந்து வருகின்றனர். எங்களைப் புரிந்துகொண்டு விரைவில் அவரும் எங்களுடன் வந்து சேருவார்.
எல்லோரும் இணைந்து பணியாற்றி வருகிறோம். கட்சி, ஆட்சி நன்றாக நடந்து வருகிறது. அதிமுகவில் இருந்து ஒரு தொண்டர்கூட மாற்றுக் கட்சியில் இணையவில்லை. அதிமுகவின் எல்லா அணிகளையும் இணைக்க எங்களுக்கு ஒரு நிமிடம் போதும். ஒரு சில நாட்களுக்கு பின்னர் அதிமுக மீண்டும் நிமிர்ந்து நிற்கும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT