Published : 15 Jul 2017 08:55 AM
Last Updated : 15 Jul 2017 08:55 AM

செம்மொழி தமிழாய்வு மைய இயக்குநருக்கு தமிழிசை சவுந்திரராஜன் கடிதம்

செம்மொழி தமிழாய்வு மைய அலுவலக முத்திரையிலும் மற்ற தொடர்பு பணிகளிலும் தமிழ் இருக்க வேண்டும் என்று அந்த மையத் தின் இயக்குநருக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக செம்மொழி தமிழாய்வு மைய இயக்குநருக்கு தமிழிசை சவுந்திரராஜன் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப் பதாவது: உலக மொழிகளில் தொன்மையான மொழி தமிழ் மொழி. அதை அனைவரும் கற்க முயற்சிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அவர் தமிழின் தொன்மையையும் பெருமையையும் பாராட்டி உள்ளார்.

அப்படிப்பட்ட பெருமை மிக்க மொழி குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் செம்மொழி ஆய்வு மையம், தனது அலுவலக பணிகளுக்கு பயன்படுத்தப்படும் முத்திரைகளில் ‘தமிழ்’ இடம்பெற வேண்டும் என்பது முக்கியமானது. எனவே, அலுவலக முத்திரையிலும் மற்ற தொடர்பு பணிகளிலும் தமிழும் இருக்குமாறு ஆவண செய்திட வேண்டுகிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x