Published : 19 Jul 2017 08:27 AM
Last Updated : 19 Jul 2017 08:27 AM

சசிகலா குறித்த புகைப்படம், வீடியோ பொய்யானவை: கர்நாடக அதிமுக செயலாளர் விளக்கம்

பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலா வுக்கு சிறப்பு சலுகை அளிக்கப் பட்டுள்ளதாக முன்னாள் சிறைத் துறை அதிகாரியான டிஐஜி ரூபா புகார் தெரிவித்தார். இதற் காக, சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணாவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் புகார் கூறினார். இது நாடு முழுவதும் பெரும் பரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, சென்னையில் நேற்று அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்தார். பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:

பரப்பன அக்ரஹாரா சிறையில் டிஐஜி ரூபா கடந்த 30-ம் தேதி ஆய்வு நடத்தினார். அப்போது சசிகலாவைப் பற்றி எந்தவித குற் றச்சாட்டுகளும் தெரிவிக்க வில்லை.

இதன்பிறகு சில கைதிகளுக்கு எச்ஐவி நோய் இருப்பதாக ரூபா தனது முகநூலில் பதிவிட்டார். அதற்காக அவருக்கு மெமோ வழங்கப்பட்டது. மேலும் முதல்வர் சித்தராமையா கலந்து கொண்ட கூட்டத்தில் ரூபா கலந்து கொள்ளா ததற்கும் மெமோ வழங்கப்பட்டது. இந்த மெமோவிலிருந்து தப்பிக்க இன்னும் சில நாட்களில் ஓய்வு பெறவுள்ள சத்தியநாராயண ராவ் மீது குற்றம்சாட்ட ரூபா முயற்சித் தார். அதற்காக சசிகலாவின் பெயரை ரூபா பயன்படுத்தினாரா எனத் தெரியவில்லை.

சசிகலா சிறையில் இருப்பது போல வெளியாகியிருக்கும் படம், வீடியோ ஆகியவை முற்றிலும் கிராபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. அவை பொய்யானவை. சசிகலா வைப் பற்றி அவதூறு பரப்புபவர் கள் தயவுசெய்து அதை நிறுத்திக் கொள்ள வேண்டும். சசிகலா சிறையில் உள்ள உணவைத்தான் உட்கொள்கிறார். வெளியில் இருந்து அவருக்கு உணவு வழங் கப்படவில்லை.

சசிகலா எந்தத் தவறும் செய்ய வில்லை. எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை. மெமோவில் இருந்து தப்பிக்கவே ரூபா இப்படி ஒரு திட்டமிட்ட அவதூறைப் பரப்புவதாக கர்நாடகாவில் மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

இவ்வாறு புகழேந்தி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x