Published : 22 Jul 2017 08:49 AM
Last Updated : 22 Jul 2017 08:49 AM
வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான உத்தரவை ரயில்வே அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறியதாவது: வெளி நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்தவும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (என்ஆர்ஐ) இதுவரையில் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு வசதி இல்லாமல் இருந்தது. இதற்கிடையே, வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய ரயில்வே அமைச்சகம் நேற்று முன்தினம் பிறப்பித்துள்ளது.
இவர்கள், 365 நாட்களுக்கு முன்பு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஆனால், அவர்களுக்கு 120 நாட்களுக்கு முன்புதான் இருக்கை அல்லது படுக்கை ஒதுக்கீடு செய்யப்படும். ராஜ்தானி, சதாப்தி, கதிமான், தேஜாஸ் உள்ளிட்ட அனைத்து விரைவு ரயில்களில் உள்ள ஏசி முதல் வகுப்பு, 2-ம் ஏசி மற்றும் எக்ஸிகியூடிவ் வகுப்பு பெட்டிகளில் மட்டும் முன்பதிவு செய்யலாம்.
ஐஆர்சிடிசி இணையதளத்தில் விசா, பாஸ்போர்ட், சர்வதேச மொபைல் எண் ஆகிய விவரங் களையும் முன்பதிவின்போது பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் சேவை கட்டணமாக தலா ரூ.200 வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT