Published : 07 Jul 2017 10:00 AM
Last Updated : 07 Jul 2017 10:00 AM

இலவச வேட்டி, சேலை திட்ட நூல் கொள்முதல் டெண்டருக்கு தடை

பொங்கல் பண்டிகையை யொட்டி இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு நூல் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் அறிவிப் பாணையை தமிழக அரசு கடந்த ஜூன் 22-ம் தேதி வெளியிட்டது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சோழபுரத்தில் உள்ள ஸ்ரீ வெங்கட்ராம் நூற்பாலை மில் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார் பில் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும். அந்த திட்டத்துக் கான நூல் கொள்முதல் டெண்ட ரில், மாசு கட்டுப்பாடு வாரியத் திடம் இருந்து ‘ஜீரோ டிஸ்சார்ஜ்’ சான்றிதழ் பெற்ற நூற்பு நிறுவ னங்கள் மட்டுமே பங்கேற்க வேண் டும் என நிபந்தனை விதிக்கப் பட்டுள்ளது.

இந்த நிபந்தனையால் அகில இந்திய அளவில் நடக்கும் டெண் டரில் ஜீரோ - டிஸ்சார்ஜ் பெறாத மற்ற நூற்பு நிறுவனங்களால் பங்கேற்க முடியாது. எங்களது நிறுவனம் சாயமேற்றுவதற்காக மும்பையில் உள்ள நூற்பு நிறுவ னத்துடன் ஒப்பந்தம் செய்துள் ளோம். ஆனால், அகில இந்திய அளவில் ஜீரோ - டிஸ்சார்ஜ் யூனிட் சான்றிதழ் கொண்ட சாயக் கழிவு ஆலைகள் மற்றும் நூற்பு ஆலைகள் தமிழகத்தில் மட்டுமே உள்ளன.

மகாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களில் சாயக்கழிவு நீர் கடலில் கலக்க அனுமதி உள்ளது. எனவே, இந்த ஒரு நிபந்தனையின் மூலம் இலவச வேட்டி, சேலை டெண்டரில் பெரும் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது.

எனவே, இலவச வேட்டி, சேலை திட்டத்துக் கான நூல் கொள்முதலுக்கான டெண்டரை இறுதி செய்ய தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரி யிருந்தார்.

இந்த மனு, நீதிபதி எம்.துரை சாமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜூலை 13-ம் தேதி இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கான நூல் கொள்முதல் டெண்டரை இறுதி செய்ய தமிழக அரசுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பாக தமிழக அரசு பதி லளிக்கவும் நீதிபதி உத்தர விட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x