Published : 28 Nov 2014 11:43 AM
Last Updated : 28 Nov 2014 11:43 AM

காஸ் நேரடி மானிய திட்டத்தில் சேர விண்ணப்ப விநியோகம் தொடக்கம்: விண்ணப்பத்துக்கு பணம் கேட்டால் நடவடிக்கை

தமிழகத்தில் சமையல் காஸ் பயன்படுத்தும் நுகர்வோர்கள் மத்திய அரசின் நேரடி காஸ் மானிய திட்டத்தில் சேருவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப் பட்டு வருகிறது.

மத்திய அரசின் நேரடி காஸ் மானிய திட்டம் தற்போது நாட்டின் 11 மாநிலங்களில் உள்ள 54 மாவட்டங்களில் அமல்படுத்தப் பட்டுள்ளது. தமிழகம் மற்றும் நாட்டின் இதர மாநிலங்களில் வரும் ஜனவரி மாதம் முதல் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் நேரடி காஸ் மானிய திட்டத்தில் சேருவதற்கான படிவங்கள், காஸ் ஏஜென்சிகள் மூலம் நேற்று முதல் விநியோகிக்கப்படுகின்றன.

இது குறித்து ஐ.ஒ.சி. அதிகாரி ஒருவர் கூறும்போது, “தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் முதல் நேரடி மானிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. நுகர்வோர்கள் நேரடி மானிய படிவத்தை ஏஜென்சிகள் மூலம் பெற நேற்று முதல் உத்தரவு போடப்பட்டுள்ளது. படிவங்களை நுகர்வோர்களுக்கு வழங்க யாராவது பணம் கேட்டால் கடுமையான நடவடிக்கை எடுக் கப்படும்”என்றார்

எப்படி சேருவது:

மத்திய அரசின் நேரடி காஸ் மானிய திட்டத்தில் சேர காஸ் யாருடைய பெயரில் இருக்கிறதோ அவர்களுக்கு ஆதார் அட்டை, வங்கி கணக்கு ஆகியவை இருக்க வேண்டும். நுகர்வோர் நேரடியாக காஸ் மானியம் பெற தங்களுடைய வங்கிக் கணக்கை கண்டிப்பாக பொதுத்துறை வங்கி யில் வைத்து இருக்க வேண்டும்.

ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு ஆகியவற்றை வைத்து இருக்கும் நுகர்வோர்கள் காஸ் ஏஜென்சியிடம் சென்று படிவம் 1, படிவம் 2 ஆகியவற்றை பெற்று பூர்த்தி செய்ய வேண்டும். பின்பு படிவம் 1-ஐ வங்கியில் கொடுக்க வேண்டும். படிவம் 2-ஐ காஸ் ஏஜென்சியிடம் வழங்க வேண்டும்.

ஆதார் அட்டை இல்லாத நுகர்வோர்கள், வங்கிக் கணக்கு எண் கொண்டு காஸ் ஏஜென்சி யிடம் படிவம் 3 மற்றும் படிவம் 4-ஐ பெற்றுக் கொள்ள வேண்டும். அதில் படிவம் 3-ல் காஸ் நிறுவனம் அனுப்பும் 17 இலக்கு கொண்ட எண்களை பூர்த்தி செய்து வங்கியிலும் படிவம் 4-ஐ ஏஜென்சியிலும் கொடுக்க வேண்டும்.

ஜனவரி முதல் மார்ச் மாதத்துக் குள் நேரடி காஸ் மானிய படிவத்தை பதிவு செய்து கொடுத்தால் அவர்களுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் முன்பணம் ரூ. 568 மற்றும் அந்தந்த மாதத்திற்கான மானியத் தொகை வழங்கப்படும்.

ஜூன் மாதத்துக்குள் இத்திட்டத் தில் சேர வேண்டும். இல்லை யென்றால் ஜூலை மாதம் முதல் மானிய தொகை வழங்கப்படாது. ஜூலை மாதத்தில் இத்திட்டத்தில் சேர்ந்தால் முந்தைய மாதத்துக் கான காஸ் மானியம் வழங்கப்படாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x