கருணை அடிப்படையில் 62 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் பழனிசாமி வழங்கினார்

கருணை அடிப்படையில் 62 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் பழனிசாமி வழங்கினார்
Updated on
1 min read

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் கருணை அடிப்படையில் 62 பேருக்கும், குடிநீர் வழங்கல் துறையில் தேர்வு செய்யப்பட்ட 100 உதவிப் பொறியாளர்களுக்கும் பணி நியமன ஆணைகளை முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிக்காலத்தில் காலமான 62 அலுவலர்கள், பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்க அடையாளமாக 5 பேருக்கு முதல்வர் கே.பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர அபிவிருத்திப் பகுதிகள் தவிர மாநிலம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்கிறது. மேலும், கூட்டுக் குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகளையும் செய்து வருகிறது. தமிழ்நாடு குடிநீர் வாரியப் பணிகளை திறம்பட செயல்படுத்தி பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க உதவிப் பொறியாளர்களின் பணி நியமனம் அத்தியாவசியமான ஒன்றாகும்.

அதன்படி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் உதவிப் பொறியாளர் பணியிடத்துக்கு 75 பொதுவியல் பொறியாளர்கள் மற்றும் 25 இயந்திரவியல் பொறியாளர்கள் என 100 பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமன ஆணையை வழங்க அடையாளமாக 5 பேருக்கு முதல்வர் கே.பழனிசாமி இன்று பணி ஆணைகளை வழங்கினார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in