Published : 10 Jul 2017 09:22 AM
Last Updated : 10 Jul 2017 09:22 AM

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,912 கனஅடியாக உயர்ந்தது.

வறட்சி காரணமாக கடந்த சில மாதங்களாக போதிய நீர்வரத்து இன்றி மேட்டூர் அணை வறண்டு காணப்பட்டது. 120 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 20.48 அடியாக நீர்மட்டம் உள்ளது. இதனால் மேட்டூர் அணை மூலம் குடிநீர் பெரும் மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

மே கடைசி வாரத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணைக்கு கணிசமான அளவில் நீர்வரத்து அதிகரித்தது. மே 25-ம் தேதி விநாடிக்கு 1,021 கனஅடியும், 30-ம் தேதி விநாடிக்கு 2,607 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. பின்னர் மழை குறைந்ததால், நீர்வரத்தும் படிப்படியாக குறைந்தது.

ஜூன் 3-ம் தேதி விநாடிக்கு 1,333 கனஅடியாக நீர்வரத்து இருந்தது. அதன்பின்னர் நீர்வரத்து 100 அடிக்கும் குறைவானது. கர்நாட காவில் காவிரி நீர்பிடிப்பு பகுதி களில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள அணைகள் நிரம்பி வருகின்றன.

இதையடுத்து, ஜூலை 1-ம் தேதி முதல் கர்நாடகா மாநிலம் கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரியில் விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், கடந்த 8 நாட்களாக காவிரியில் நீர்வரத்து அதிகரிக்கவில்லை.

நேற்று முன்தினம் அணைக்கு விநாடிக்கு 37 கனஅடி மட்டுமே நீர்வரத்து இருந்தது. ஆனால் நேற்று காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 1,912 கனஅடி நீர்வரத்து அதிகரித்தது. அணை நீர்மட்டம் 20.48 அடியாகவும், குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x