இலங்கை கடற்படையினர் அத்துமீறல்: புதுக்கோட்டை மீனவர்கள் 8 பேர் கைது- ரோந்து படகால் இடித்து மீன்பிடி படகு மூழ்கடிப்பு

இலங்கை கடற்படையினர் அத்துமீறல்: புதுக்கோட்டை மீனவர்கள் 8 பேர் கைது- ரோந்து படகால் இடித்து மீன்பிடி படகு மூழ்கடிப்பு
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். மற்றொரு சம்பவத்தில் ரோந்துப் படகு மூலம் இடித்ததில் ஒரு மீன்பிடி படகு கடலில் மூழ்கியது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த எஸ்.நாகமுத்து, ஆர்.அய்யாமுத்து, என்.ராமமூர்த்தி ஆகியோர் ஒரு படகிலும், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த எஸ்.கணேஷ், எம்.மதன், எ.பூபாலன், சதீஸ், அர்ஜுணன் ஆகியோர் மற்றொரு படகிலும் நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துள்ளனர்.

அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி, 8 மீனவர்களையும் கைது செய்தனர். மேலும், 2 விசைப்படகு களையும் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், கோட்டைப் பட்டினத்தில் இருந்து நேற்று முன்தினம் ராசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கே.காளி, என்.உதயா, எ.அஞ்சான் மற்றும் முத்து ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவில் கோடியக் கரை அருகே மீன்பிடித்துள்ளனர்.

அப்போது, இலங்கை கடற்ப டையினர், தங்களது ரோந்து படகு மூலம் இடித்ததில் மீனவர்களின் விசைப்படகு உடைந்து நொறுங்கியது. இதில், கடல் நீர் உட்புகுந்ததால் அந்தப் படகு கடலில் மூழ்கியது. இதைத்தொடர்ந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள 4 மீனவர்களும் கடலில் குதித்து தத்தளித்துள்ளனர். அவ்வழியே வந்த கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் அவர்களை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர்.

தகவலறிந்த கடலோரக் காவல் படையினர், மீன்வளத் துறை அலுவலர்கள் மீனவர்களுடன் 5 படகுகளில் சென்று கடலில் தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும் நேற்று வரை படகு கிடைக்கவில்லை.

இதேபோல, கோட்டைப்பட்டி னத்தைச் சேர்ந்த அஞ்சப்பன், பழனி, கோவிந்தன் ஆகியோர் ஒரு விசைப்படகில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்துப் படகு மூலம் பலமாக மோதியுள்ளனர்.

இதில், படகு முழுவதும் உடைந்து நொறுங்கிவிட்டது. இதைத்தொடர்ந்து மீன்பிடிப்பதை கைவிட்டுவிட்டு அதே படகில் 3 மீனவர்களும் கரை திரும்பினர்.

ஒரே நாளில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை கைது செய்ததுடன், 2 விசைப் படகுகளையும் சேதம் அடையச் செய்துள்ள சம்பவம் மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in