Published : 11 Jul 2017 08:53 AM
Last Updated : 11 Jul 2017 08:53 AM

பிரபல தாதா ஸ்ரீதர் மகனிடம் போலீஸார் விசாரணை: வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது

கள்ளச் சாராய வியாபாரியாக இருந்து அரசியல்வாதிகள் உதவி யுடன் தாதாவாக மாறியவர் காஞ்சி புரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் தன பாலன்(52). இவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இவர் சில ஆண்டுகளுக்கு முன் காஞ்சிபுரத்தில் இருந்து குவைத் நாட்டுக்கு தப்பிச் சென்று அங்கு தலைமறைவானார். அங்கி ருந்தபடியே காவல்துறைக்கு எதிராகவும், பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு எதிராகவும் பேட்டிகளை அளித்து வந்தார். அவை இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

பின்னர் குவைத்தில் ஸ்ரீதருக்கான விசா காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து அங்கு தொடர்ந்து இருக்க முடியாமல் போலி பாஸ்போர்ட் மற்றும் விசா மூலம் இலங்கைக்கு தப்பிச் சென்றதாகத் தெரிகிறது.

இந்நிலையில் லண்டனில் எம்பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஸ்ரீதர் மகன் சந்தோஷ்குமார் அங்கிருந்து இலங்கை வழியாக சென்னை வந்தார். இதனால் சந்தே கம் அடைந்த அமலாக்கப் பிரிவினர் அவரிடம் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, சிவகாஞ்சி காவல் நிலைய ஆய் வாளர் மணிமாறன் ஆகியோர் நேற்று முன்தினம் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது இலங்கையில் பதுங்கி இருக்கும் ஸ்ரீதரின் இருப் பிடம் குறித்தும், அவரை சந்தோஷ் குமார் சந்தித்தாரா? என்பது குறித் தும் துருவித்துருவி கேள்விகளை கேட்டதாகத் தெரிகிறது. நேற்று முன் தினம் மாலை வரை நீடித்த விசா ரணையின் தொடர்ச்சியாக அவரை நேற்றும் விசாரணைக்கு ஆஜரா கும்படி போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் தனது விசாவை புதுப்பிக்கும் பணி தொடர்பாக சென்னைக்கு சென்ற சந்தோஷ்குமார் போலீஸாரின் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் உடல் நிலை சரியில்லை என்று காரணம் கூறியுள்ளார். இதனை ஏற்காத காவல் துறையி னர் அவரை உடனடியாக ஆஜராகும் படி அவரது வீட்டில் சம்மனை ஒட்டியுள்ளனர்.

ஸ்ரீதரை நெருங்கும் காவல்துறை

காவல் துறையினருக்கு ஸ்ரீதர் இருக்கும் இடம் தெரிந்துவிட்டது. அவர் இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. இலங்கை போலீஸார் உதவியுடன் ஸ்ரீதரைப் பிடிக்க மத்திய அரசின் உதவியை நாட்டியுள்ளனர். ஸ்ரீதர் அங்கிருந்து தப்பிச் செல்லாமல் இருக்க இலங்கை போலீஸார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். சந் தோஷ்குமார் தொடர்ந்து விசார ணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் பட்சத்தில் அவரது பாஸ்போர்ட்டை முடக்கும் நடவடிக்கையில் இறங்க உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x