Published : 26 Nov 2014 10:33 AM
Last Updated : 26 Nov 2014 10:33 AM

ஜி.கே.வாசன் கட்சி கொடி அறிமுகம்

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, புதிய கட்சி தொடங்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே வாசன், தனது கட்சியின் கொடியை சென்னையில் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

நேர்மை, எளிமை, தூய்மை ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில், கட்சியின் புதிய கொடியை அறிமுகம் செய்துள்ளோம். கட்சியின் கொடியில் உள்ள ஆரஞ்சு நிறம் தியாகத்தையும், வெள்ளை நிறம் உண்மை, அமைதியையும், பச்சை நிறம் செழிப்பு, பசுமையையும் குறிக்கிறது. வண்ணக்கொடியின் நடுவில் காமராஜர், மூப்பனார் ஆகிய தலைவர்களின் படங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

காமராஜர் ஆட்சியைப்போல், பொற்கால ஆட்சியை தமிழ கத்தில் ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களது லட்சியம். கல்விப் புரட்சி, தொழில்புரட்சி, விவசாய புரட்சியை ஏற்படுத்திய காமராஜர் ஆட்சியை அமைப்பதுதான் எங்களது விருப்பம். இவ்வாறு ஜி.கே. வாசன் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், பி.எஸ்.ஞானதேசிகன், முன்னாள் எம்.பி விஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x