Published : 20 Jul 2017 08:28 AM
Last Updated : 20 Jul 2017 08:28 AM
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வின் வீடு, பங்களா, கார் உள் ளிட்ட அவர் பயன்படுத்திய பொருட் கள் அனைத்தையும் நாட்டுடைமை யாக்கி காட்சிப்படுத்த வேண்டும் என காட்டுமன்னார்கோவில் அதிமுக எம்எல்ஏ என்.முருகு மாறன் கோரிக்கை விடுத்தார்.
சட்டப்பேரவையில் நேற்று நிதி, பொது, பணியாளர் நலன், நிர் வாகச் சீர்திருத்தம், திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சி கள், ஓய்வூதியங்கள் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசிய தாவது:
மறைந்த முதல்வர் ஜெய லலிதா வாழ்ந்த வேதா இல்லம், பங்களா, கார்கள் உள்ளிட்ட அவர் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் நாட்டுடைமை யாக்கி காட்சிப்படுத்த வேண் டும்.
ஜெயலலிதா இருந்தபோது ஆகாரத்துக்காகக்கூட வாய் திறக் காதவர்கள், இப்போது ஆதாயத் துக்காக பேசிக்கொண்டே இருக் கிறார்கள். அண்ணன் - தம்பி சண்டை நீடிக்காது. அதிமுக என்ற இயக்கம் நூறாண்டுகள் கடந்தும் இருக்கும் என்ற ஜெயலலிதாவின் எண்ணத்தை நனவாக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஓரணியில் நின்று துரோகிகளை வென்று எதிரிகளை வீழ்த்துவோம். கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற முதல்வர் பழனிசாமி தலைமையில் அணி வகுப் போம்.
சட்டப்பேரவை உறுப்பினர் களின் மாத ஊதியத்தை ரூ. 2 லட்சமாகவும், முன்னாள் உறுப் பினர்களின் ஓய்வூதியத்தை ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாகவும் அதிகரிக்க வேண் டும். தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.5 கோடியாக அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு முருகுமாறன் பேசினார்.
அவரது பேச்சை அமைச்சர் களும், அதிமுக உறுப்பினர்களும் மேஜையை தட்டி வரவேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT