Published : 18 Jul 2017 09:57 AM
Last Updated : 18 Jul 2017 09:57 AM

6 மடங்கு டேட்டா சலுகை: பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு டேட்டா சேவையில் ஆறு மடங்கு சலுகையை அறிவித்துள்ளது.

மத்திய அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் தனது போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு டேட்டா சேவையில் ஆறு மடங்கு சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, ‛பிளான்-99’ என்ற திட்டத்தில் இதுவரை டேட்டா வழங்கப்படவில்லை. இனிமேல் 250 எம்பி அளவுக்கு டேட்டா வழங்கப்படும். அதேபோல், பிளான்-225 திட்டத்தில் 200 எம்பி-க்கு பதிலாக 1 ஜிபி டேட்டாவும், பிளான்-325 திட்டத்தில் 250 எம்பி-க்கு பதிலாக 2 ஜிபியும், பிளான்-525 திட்டத்தில் 500 எம்பி-க்கு பதிலாக 3 ஜிபி டேட்டாவும் வழங்கப்படும்.

மேலும், பிளான்-725 திட்டத்தில் 1 ஜிபி டேட்டாவுக்கு பதிலாக 5 ஜிபி டேட்டாவும், பிளான்-799 திட்டத்தில் 3 ஜிபி டேட்டாவுக்கு பதிலாக 10 ஜிபி டேட்டாவும் வழங்கப்படும். அத்துடன், பிளான்-799 திட்டத்தில் அளவில்லா தொலைபேசி அழைப்புகளும், பிளான்-525 திட்டத்தில் ரூ.450-க்கு டாக் வேல்யூவும் வழங்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x