Published : 10 Jul 2017 10:17 AM
Last Updated : 10 Jul 2017 10:17 AM

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

மேற்கு வங்க கலவரத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து சென்னையில் இந்து முன்னணியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் தில் இந்து முன்னணி மாநில அமைப்பாளர் க.பக்தன், மாநில துணைத் தலைவர் ஜி.கார்த்திகேயன், சென்னை மாநகரத் தலைவர் இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கு வங்கத் தில் இந்துக்கள் தாக்கப்படு வதைக் கண்டித்தும், இந்துக் களைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங் கள் எழுப்பப்பட்டன.

மேலும் இந்தியாவில் சீன பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட் டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத் தின்போது க.பக்தன் பேசிய தாவது:

வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலத்துக்குள் முஸ்லிம்கள் நுழைகிறார்கள். அவர்களைத் தடுக்க வேண்டும். கலவரத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அதனைத் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x