Published : 24 Jul 2017 09:42 AM
Last Updated : 24 Jul 2017 09:42 AM

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு நிதி திரட்ட மாரத்தான் ஓட்டம்: 79 வயது பெண்மணி உட்பட 5 ஆயிரம் பேர் பங்கேற்பு

சென்னையில் மாற்றுத்திறனாளி கள் நலனுக்காக நிதி திரட்ட ட்ரீம் ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் நேற்று நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில், 79 வயது பெண்மணி உட்பட 5 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த ட்ரீம் ரன்னர்ஸ் அமைப்பு, காவிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து, இன் றைய தலைமுறையினரிடம் ஓட் டத்தின் மூலம் உடற்பயிற்சியை ஊக்குவிக்கவும், பொருளாதாரத் தில் நலிவடைந்த மாற்றுத்திற னாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்குவதற்கான நிதி திரட்டவும், மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை பெசன்ட் நகரில் நேற்று நடத்தியது. இதில் 21.1 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் பிரிவில் மாரத்தான் பந்தயங்கள் நடைபெற்றன.

21.1 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டி அதிகாலை 4.30 மணிக்கு பெசன்ட் நகர் ஆல்காட் நினைவு பள்ளி விளையாட்டு திடலில் தொடங்கியது. மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ ஆர்.நடராஜ், இந்த தொடர் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பங் கேற்றவர்கள், மெரினா கடற்கரை யில் உள்ள உழைப்பாளர் சிலை வரை ஓடி, திரும்பவும் ஆல்காட் பள்ளியை வந்தடைந்தனர். 10 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டி காலை 5 மணிக்கு தொடங்கியது. இதில் பங்கேற்றவர்கள், ஆல்காட் பள்ளியில் இருந்து புறப்பட்டு, சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் எம்ஆர்சி.நகர் வழியாகச் சென்று, மீண்டும் ஆல்காட் பள்ளித் திடலை வந்தடைந்தனர். இந்த போட்டிகளில், 10 கிலோ மீட்டர் பிரிவில் 79 வயது பெண் மணி சுந்தரி, 76 வயதான வி.ஆர்.ஜெயராமன், 21.1 கிலோ மீட்டர் பிரிவில் 71 வயதான அய்யாவு உள்ளிட்ட 5 ஆயிரம் பேர் பங் கேற்று ஓடினர். இந்த போட்டியின் மூலம் திரட்டப்பட்ட நிதி, மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை கால்களை வழங்கி வரும் ஃபிரீடம் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது. இந்த பந்தயத்தில் பல்வேறு பிரிவு களில் சிறப்பிடம் பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x