Published : 29 Jul 2017 09:27 AM
Last Updated : 29 Jul 2017 09:27 AM
‘நாம் தமிழர் கட்சி’யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக சேலம் அஸ்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள மணக்காட்டில் கடந்த 5-ம் தேதி ‘நாம் தமிழர் கட்சி’ சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய பிரதேசத்தில் துப்பாக்கி சூட்டில் விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
அப்போது, தமிழக மீனவர்கள் தொடர்பான பிரச்சினையில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தமிழக விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பிரச்சினைகளை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை எனவும் சீமான் விமர்சனம் செய்து பேசினார்.
இதுகுறித்து உளவுத் துறை போலீஸார் தகவல் சேகரித்து, உயர் அதிகாரிகளுக்கு அனுப் பினர். சீமான் பொதுக் கூட்டத்துக்கு பாதுகாப்புக்குச் சென்ற அஸ்தம்பட்டி போலீஸாரே இதுகுறித்து, சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, வன் முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது போலீ ஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT