Published : 05 Jul 2017 08:51 AM
Last Updated : 05 Jul 2017 08:51 AM

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை கோரிய வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை வரும் ஜூலை 7-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து 3 ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க உத்தரவிடக்கோரி சென்னை அரும் பாக்கத்தைச் சேர்ந்த பி.ஏ.ஜோசப் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதேபோல் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ அல்லது என்ஐஏ விசாரணை அமைப்புகளைக் கொண்டு விசாரணை நடத்தக்கோரி நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோவிலைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஞானசேகரன் என்பவரும் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

மேலும், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டுமென சென்னை சுங்கம் மற்றும் கலால் சேவை வரி தீர்ப்பாய உதவி ஆணையர் பி.பாலமுருகனும் தனியாக வழக்குத் தொடர்ந் துள்ளார். இதில் பி.ஜோசப் தொடர்ந்த வழக்கில் மட்டும் அப்போலோ மருத்துவமனை மற்றும் தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ஆகியோர் தனித்தனியாக பதில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் பட்டியலிடப்பட்டு இருந்தது. ஆனால் மனுதாரர் ஜோசப் தரப்பு வழக்கறிஞர் வராததால் வழக்கினை தள்ளி வைக்க வேண்டுமென நீதிபதிகளிடம் கோரப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்குகள் மீதான விசாரணையை நீதிபதிகள் ஜூலை 7-ம் தேதியன்று விசாரிப்பதாகத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x