Published : 30 Jul 2017 04:39 PM
Last Updated : 30 Jul 2017 04:39 PM

ஜெயலலிதா நினைவிடத்தில் அருண் ஜேட்லி அஞ்சலி

மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அஞ்சலி செலுத்தினார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் ஜிஎஸ்டி தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சென்னை வந்தார்.

கருத்தரங்கில் பங்கேற்பதற்கு முன்னதாக, மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அருண் ஜேட்லி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். உடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

அதற்குப் பிறகு அருண் ஜேட்லி, நிர்மலா சீதாராமன், ஜெயக்குமார் ஆகிய மூவரும் சென்னை பல்கலைக்கழகத்துக்கு வருகை புரிந்து ஜிஎஸ்டி கருத்தரங்கில் பங்கேற்றனர்.

இதனிடையே, ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை பல்கலை முன்பு 12 மாணவர்கள் அருண் ஜேட்லி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த மாணவர் குழுவை போலீஸ் விசாரித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x