Published : 21 Apr 2017 09:43 AM
Last Updated : 21 Apr 2017 09:43 AM
‘தி இந்து’ நாளிதழ், கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத் தும் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ எனும் வழிகாட்டி நிகழ்ச்சி எழும்பூர் எத்தி ராஜ் மகளிர் கல்லூரியில் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.
ஐஏஎஸ் படிக்கவேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால், அதற்கான அடிப்படை கல்வித் தகுதி என்ன, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும், அதிக செலவாகுமா என ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம். அவ்வாறான தயக்கத்தைப் போக் கும் வகையில், ஐஏஎஸ் படிப்ப தற்கான தெளிவைத் தரும் நோக் கில் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ என்ற நிகழ்ச்சி கல்லூரி மாணவர்களுக் காக நடத்தப்பட உள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இந்த வழிகாட்டி நிகழ்ச்சி வரும் 23-ம் தேதி (ஞாயிறு) காலை நடைபெற உள்ளது. இதில் கடலோரப் பாதுகாப்புக் குழு ஏடிஜிபி முனைவர் சி.சைலேந்திரபாபு ஐபிஎஸ், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை முதன்மைச் செயலர்/ ஆணையர் முனைவர் வெ.இறையன்பு ஐஏஎஸ், நகராட்சி நிர்வாக ஆணையர் ஜி.பிரகாஷ் ஐஏஎஸ், வருமானவரித் துறை இணை இயக்குநர் வீ.நந்தகுமார் ஐஆர்எஸ், ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ், கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பேராசிரியர் சத்ய பூமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.
காலை 9 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை நடைபெறும். இதில் பங்கேற்கும் அனைவருக்கும் அனைத்து தேர்வு மாதிரி வினாத்தாள், பாடத்திட்ட கையேடு இலவசமாக வழங்கப்படுகிறது.
மேலும், தேர்வு செய்யப்படும் 3 பேருக்கு இலவசப் பயிற்சியும் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் 94442 27273 என்ற செல்போன் எண்ணுக்கு, தங்களது பெயர், கல்வித் தகுதி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களைக் குறுந்தகவலாக (எஸ்எம்எஸ்) அனுப்பிப் பதிவு செய்துகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT