Published : 19 Jun 2016 08:15 AM
Last Updated : 19 Jun 2016 08:15 AM

புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை: துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நம்பிக்கை

புதுச்சேரியில் நிறுத்தப்பட்ட விமான சேவை விரைவில் தொடங்கும் என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலையத்துக்கு, சிறிய ரக விமானங்கள் இயக் கப்பட்ட நிலையில், பெரிய விமானங்கள் இயக்கும் அள வுக்கு கடந்த 2012-ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு ஜனவரி முதல் ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்பட்டது. எதிர்பார்த்த அளவில் பயணிகள் வராததால் அரசு மானியம் தொடர்ந்து கிடைக்கவில்லை என கூறி கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரியில் ஸ்பைஸ் ஜெட் விமானம் நிறுத்தப்பட்டது.

மத்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனத்துடன், புதுச்சேரி அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கடந்த 2015 ஏப்ரல் 14-ம் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து பெங்களூருவுக்கு விமான சேவை மீண்டும் தொடங் கியது. திடீரென அதே ஆண்டு செப்டம்பர் மாதம் விமான சேவை நிறுத்தப் பட்டது.

இந்நிலையில் நேற்று லாஸ் பேட்டை விமான நிலையத்துக்கு வந்த துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, விமான நிலைய வளாகம், விமான ஓடுதளம் மற்றும் விரிவாக்கத்துக்கு தேவையான நிலத்தையும் பார்வையிட்டார்.

பின்னர் கிரண்பேடி செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின் புதிய விமான சேவை கொள்கையின் அடிப்படை யில் புதுச்சேரிக்கு மீண்டும் விமான சேவை பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிக அளவில் உள்ளன. நிறுத்தப்பட்ட விமான சேவையை மீண்டும் தொடங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகி றது. வரும் 20-ம் தேதி மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு புதுச்சேரிக்கு வருகிறார்.

புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்குவது தொடர்பாக அவருடன் முதல்வ ரும், நானும் ஆலோசனை நடத்த உள்ளோம். விமான நிலையத்தை விரிவுபடுத்த தமிழக நிலம் தேவைப்படுகிறது. அதற்கும் பேசி தீர்வு காணப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x