Published : 20 May 2017 10:46 AM
Last Updated : 20 May 2017 10:46 AM

வட தமிழகத்தில் இரு நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும்: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல்

வட தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

ஆந்திர மாநிலத்தில் வெப்ப நிலை தொடர்ந்து இயல்பை விட 8 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உள்ளது. அப்பகுதியில் இருந்து வடமேற்கு திசை நோக்கி வீசும் காற்றால் வட தமிழகத்தில் இயல்பை விட அதிகமான வெப்பம்பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 45 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது.

அடுத்த இரு நாட்களுக்கு வட தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் தொடரும். கடலோர மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையும், உள் மாவட்டங்களில் 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையும் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும்.

தமிழகத்தில் மே 1-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை கோடை மழை 43.6 மி.மீ. பெய்திருக்க வேண்டும். ஆனால் 4 சதவீதம் குறைவாக 42.1 மி.மீ. மழை பெய்துள்ளது.

வேலூர், நாமக்கல், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கோடைமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தக்கலை, தாளவாடியில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமி

ழகத்தின் உட்பகுதியில் ஒரு சில இடங்களிலும், கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

11 நகரங்களில் வெயில் சதம்நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவின்படி, திருத்தணியில் 112.1, புதுச்சேரியில் 107.96, சென்னை மீனம்பாக்கத்தில் 107.78, நுங்கம்பாக்கத்தில் 104.18, கடலூரில் 107.06, வேலூரில் 106.88, நாகப்பட்டினத்தில் 103.64, காரைக்காலில் 103.1, மதுரை மற்றும் பரங்கிப்பேட்டையில் 102.2, கரூர் பரமத்தியில் 101.84, பாளையங்கோட்டை யில் 101.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x