Published : 25 Nov 2014 02:38 PM
Last Updated : 25 Nov 2014 02:38 PM
16 மாத ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, சிறுவர் சீர்திருத்தப் பள்ளி காவலர்கள் தரையில் உருண்டு ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மதுரை காமராஜர் சாலையில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி உள்ளது. சமூக நலத்துறையின் கீழ் உள்ள இப்பள்ளியை, பாலர் உதவி மையம் பராமரிக்கிறது. இங்கு காவலர்களாக கணேசன், பிரபாகரன், வித்யாசாகர் உட்பட 6 பேர் பணிபுரிகின்றனர். நேற்று கணேசன் தலைமையில் 6 பேர் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க மேலாடை அணியாமல் வந்தனர்.
கணேசன், திடீரென தரையில் உருண்டு கோஷமிட்டார். பின்னர், ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து கணேசன் கூறும்போது, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சம்பளம் வழங்கப்படும். ஆனால், கடந்த 16 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதுகுறித்து பலமுறை கேட்டும் நடவடிக்கை இல்லை. இதனால் போராட்டம் நடத்தி மனு அளித்தோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்துள்ளார் என்றார்.
தரையில் உருண்டு போராட்டம் நடத்திய சீர்திருத்தப் பள்ளி காவலர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT