Published : 06 Nov 2013 01:22 PM
Last Updated : 06 Nov 2013 01:22 PM

தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைப்பு

ராமேஸ்வரம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 30 பேரை வருகிற 19–ஆம் தேதி வரை காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேஸ்வரம், மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 30 மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று சிறைப் பிடித்துச் சென்றது.

கைது செய்யப்பட்ட 30 மீனவர்களும் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 19–ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து மீனவர்கள் அனைவரும் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்கள் உண்ணாவிரதம்: கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இருநாட்டு மீனவர்களின் பேச்சு வார்த்தையை விரைவில் நடத்த வேண்டும்.

இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களையும், அவர்களின் விசைப்படகுகளையும் விரைவில் விடுவிக்க வேண்டும். இந்திய சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x