Published : 16 Nov 2014 09:42 AM
Last Updated : 16 Nov 2014 09:42 AM

போப் பிரான்சிஸை சந்திக்கிறார் அமிர்தானந்தமயி

இந்திய ஆன்மிக தலைவர் மாதா அமிர்தானந்தமயி தேவி அடுத்த மாதம் வாட்டிகன் சென்று போப் பிரான்சிஸை சந்திக்கவுள்ளார்.

இதுகுறித்து, கேரள மாநிலம், கொல்லம் அருகேயுள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்தின் செய்தித்தொடர்பாளர் கூறும் போது, “போப் பிரான்சிஸ் அழைப்பை ஏற்று வரும் டிசம்பர் மாதம் அம்மா ரோம் செல்கிறார். அவர் யார் யாரை சந்திக்கிறார். என்ன விஷயங்களை பேசவிருக்கிறார் போன்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.

இந்நிலையில் போப்பின் அழைப்பை தனக்கு அளிக் கப்பட்ட மிகப்பெரிய கவுரவ மாகக் கருதுவதாக மாதா அமிர் தானந்தமயி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும் போது, “மதத் தலைவர்கள் இணைந்து பணியாற்றுவதன் மூலம் உலகம் முழுவதும் அமைதியும் ஒற்றுமையும் பரவிடும். இதன்மூலம் மிகப் பெரிய பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும்” என்றார்.

மாதா அமிர்தானந்தமயிக்கு உலகம் முழுவதும் சீடர்கள் உள்ளனர். இந்தியா மட்டு மன்றி வெளிநாடுகளிலும் ஏழை களுக்கு மனிதாபிமான உதவி களை அமிர்தானந்தமயி செய்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x