Published : 31 Mar 2014 11:24 AM
Last Updated : 31 Mar 2014 11:24 AM
தொடரும் மின்வெட்டுக்கு திமுக, அதிமுக ஆகிய கட்சிகளும் மத்தியில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க., காங்கிரஸ் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளுமே காரணம் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக் கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘மின்சாரத்தைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். விரை வில் மின்வெட்டு இல்லாத மாநில மாக தமிழகம் திகழும்’ என்று மதுரையில் நடந்த பிரச்சாரக் கூட் டத்தில் தமிழக முதல்வர் ஜெயல லிதா கூறியுள்ளார். கோவையில் கடந்த வாரம் 4 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. இது சிறு, குறு தொழில்களை பாதிக்கிறது.
தொழிலாளர்கள், மாணவர்கள் பாதிப்பு
சென்னையைத் தவிர மாநிலம் முழுவதும் இதே நிலைதான் உள்ளது. இதனால் வேலையின்மை ஏற்பட்டு தொழிலாளர் குடும்பங்கள் பாதிக் கும். மேலும் பரீட்சை நேரத்தில் மின்வெட்டு என்பது மாணவர்களை அதிகமாக பாதிக்கும். இந்நிலை யில் மின்வெட்டு குறித்து எப்படி கவலைப்படாமல் இருக்க முடியும்?
கடந்த 10 ஆண்டுகளில் முக்கிய மின் திட்டங்கள் எதுவும் வர வில்லை. இதற்கு திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே பொறுப்பு. மத்தியில் ஆண்ட காங்கிரஸ், பாஜகவின் பொருளாதாரக் கொள்கைகள் மின் உற்பத்தியை பாதித்துள்ளது.
தனியார் நிறுவனங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.12 கொடுக்க தயாராக இருக்கும் ஆட்சியாளர்கள் மின் வாரியத்துக்கு இந்த தொகையை வழங்கினால் தனியார் நிறுவனங் களே அவசியம் இருக்காது.
இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT