Published : 25 Mar 2017 09:05 AM
Last Updated : 25 Mar 2017 09:05 AM
இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று ஆர்.கே.நகர் தொகுதி யைச் சேர்ந்த பணியாளர்களுக்கு ஒருநாள் சம்பளத்து டன் கூடிய விடுப்பு அளிக்கவேண்டும் என தொழிலாளர் நல ஆணையர் கா.பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடக்கும் இடைத்தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக வேலையளிப்பவர்கள், அத்தொகுதி வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் பணியாளர்கள் அனைவருக்கும் ஒருநாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். தொழில் நிறுவனங்கள், கடைகள், ஐடி நிறுவனங்கள் உட்பட வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி, சுருட்டு நிறுவனங்களில் பணியாற்றும் ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர் பட்டியலில் உள்ள பணியாளர் களுக்கு இது பொருந்தும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT