Published : 06 Jul 2016 10:34 AM
Last Updated : 06 Jul 2016 10:34 AM

தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரிப்பால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் 630 மெகாவாட் நிறுத்தம்

மின்சார உற்பத்தி அதிகரித்ததன் எதிரொலியாக, தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் 630 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவக் காற்று வீசுவதால் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதனால் தமிழகத்தில் மின்சாரத்தின் தேவையைவிட உற்பத்தி அதிகமாக உள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் 630 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 1-வது அலகு பராமரிப்புப் பணிக்காக கடந்த மாதம் 19-ம் தேதி நிறுத்தப்பட்டது. பணி முடிந்து நேற்று முன்தினம் இந்த அலகு மின் உற்பத்திக்கு தயாரானது. ஆனால், தமிழகத்தின் மின்சாரத் தேவை குறைவு காரணமாக இந்த அலகை இயக்க வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டதால், இந்த அலகு தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டது.

மேலும், இரண்டாவது அலகில் கடந்த 1-ம் தேதி கொதிகலனில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்தப் பழுது நேற்று சரி செய்யப்பட்டபோதிலும், இந்த அலகை இயங்குவதும் நிறுத்தப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தைப் பொறுத்தவரை தலா 210 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

தற்போது 1, 2 மற்றும் 3-வது அலகுகள் தற்காலிகமாக மூடப்பட்டு, 630 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. 4 மற்றும் 5-வது அலகுகள் மட்டுமே செயல்பட்டு வருகின் றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x