Published : 26 Sep 2016 09:13 AM
Last Updated : 26 Sep 2016 09:13 AM
மதுரை மாகாண ஏசு சபை உயர்கல்வி பிரிவு ஒருங்கிணைப் பாளர் சேவியர் அல்போன்ஸ் எழுதிய அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாறு குறித்த இரு நூல்கள் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டன.
மதுரை மாகாண ஏசு சபை உயர்கல்வி பிரிவு ஒருங்கிணைப் பாளர் சேவியர் அல்போன்ஸ், தனது நண்பருடன் சேர்ந்து கடந்த 1977-ல் அன்னை தெரசாவுடன் பயணித்து, அவரது வாழ்க்கையில் சந்தித்த இன்னல்கள் மற்றும் பொது சேவைக்கு வந்த சூழல் தொடர்பான தகவல்களைச் சேகரித்து, “வசந்தங்கள் மீண்டும் வருவதில்லை” என்ற நூலை எழுதி வெளியிட்டிருந்தார்.
அன்னை தெரசா புனிதராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நூலில் சிறு மாற்றங்களைச் செய்து ‘ஏழைகளின் அன்னை தெரசா’ என்ற தமிழ் நூலையும், ‘தி ஸ்பிரிங் ரிட்டன்ஸ் நாட்’ என்ற ஆங்கில மொழி மாற்ற நூலையும் சேவியர் அல்போன்ஸ் உருவாக்கியுள்ளார். அதன் வெளியீட்டு விழா ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை-மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி பங்கேற்று, ‘தி ஸ்பிரிங் ரிட்டன்ஸ் நாட்’ என்ற நூலை வெளியிட, ஆற்காடு இளவரசர் பெற்றுக்கொண்டார். ‘ஏழைகளின் அன்னை தெரசா’ என்ற நூலை இந்திய தேர்தல் ஆணைய முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி செயலர் சூசன், தொழிலதிபர் சேவியர் பிரிட்டோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT