மாவட்டந்தோறும் ஆயுர்வேத மருத்துவமனை

மாவட்டந்தோறும் ஆயுர்வேத மருத்துவமனை
Updated on
1 min read

அனைத்து மாவட்டங்களிலும் ஆயுர்வேத மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஸ்ரீபட் யாசோ நாயக் தெரிவித்தார்.

மத்திய ஆயூஷ் அமைச்சக அமைச்சர் ஸ்ரீபட் யாசோ நாயக் தஞ்சாவூரில் நேற்று கூறியதாவது:

சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகிய மருத்துவங்களுக்கு மருத்துவர் களைத் தனியாக நியமிக்க வேண்டும் என மாநில அரசுகளிடம் வலியுறுத்தியுள்ளோம்.

இதைத்தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளில் தேசிய அளவில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 4,000-க்கும் அதிகமான சித்த மருத்துவ, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் உள்ள அனைத்து மாவட் டங்களிலும் ஆயுர்வேத மருத்துவ மனை அமைக்கத் திட்டமிடப் பட்டுள்ளது. இதற்காக ரூ.10.5 கோடி நிதி வழங்கப்படவுள்ளது என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in